×

உயிர்காக்கும் சிகிக்சையில் விரைவாக செயல்பட டாக்டர்கள், செவிலியர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்.

விருதுநகர், ஜன. 21: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி அரங்கில் மருத்துவர்கள், செவிலியர்கள் 30 பேருக்கு தேசிய சுகாதார சீரமைப்பு திட்டத்தில் விபத்து மற்றும் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இம்முகாமை மருத்துவக்கல்லூரி டீஜ் சங்குமணி நேற்று காலை துவக்கி வைத்தார். ஹைதராபாத்தில் இருந்து வந்திருக்கும் மருத்துவ குழுவினர் பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியில் விபத்து ஏற்பட்ட உடன் கோல்டன் ஹவர் என சொல்லப்படும் முக்கிய காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் எப்படி வேகமாக செயல்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகள் மருத்துவர்களுக்கு காத்திருக்கும் காலம் மாறி, மருத்துவர்கள் நோயாளிக்கு காத்திருக்கும் நேரம் அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு