அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அரசின் எச்சரிக்கையை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சிஎம்டிஏ முதன்மை அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.