திருச்செந்தூரில் மளிகை கடையில் பணம் பொருட்கள் கொள்ளை

திருச்செந்தூர், ஜன. 21: திருச்செந்தூர் தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (53). இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 18ம் தேதி இரவு 10 மணியளவில் கடையை பூட்டி விட்டு சத்தியசீலன் வீட்டுக்கு புறப்பட்டார். நேற்று காலை கடையை திறந்து பார்த்த போது அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. கடையில் மேற்பகுதியில் இருந்த இடைவெளி வழியாக மர்மநபர்கள் கடையில் இறங்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தியசீலன், திருச்செந்தூர் கோயில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். எஸ்ஐ குமார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: