தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாத 435 பேருக்கு ரூ.87 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி, ஜன. 21: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக  முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா  ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு தலா ரூ.500 அபராதமும் காவல்துறையால் விதிக்கப்படுகிறது. அதன்படி  தூத்துக்குடி மாவட்டத்தில்  நேற்று  பொது இடங்களில் முகக்கவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 67 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 49 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 27 பேர் மீதும், வைகுண்டம் உட்கோட்டத்தில் 37 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 46 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 146 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 26 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 37 பேர் மீதும் என மொத்தம் 435 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.87 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: