தந்தை நீரில் மூழ்கி பலி

சாத்தான்குளம், ஜன. 21: சாத்தான்குளம் அருகே உள்ள தெற்குஅமுதுண்ணாகுடியை சேர்ந்தவர் ராஜகோபால் (62),  மரம் வெட்டும் தொழிலாளி. இவரும், இவரது மகன் மணிகண்டன் (32) என்பவரும் நேற்று முன்தினம் அங்குள்ள குளத்தில் மீன் பிடிக்க வலைவிரித்தனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக ராஜகோபால், நீரில் மூழ்கினார்.  மணிகண்டனுக்கு நீச்சல் தெரியாததால் அவரால் தந்தையை காப்பாற்ற முடியவில்லை.   சம்பவம் குறித்து தகவலறிந்து சாத்தான்குளம் யூனியன் முன்னாள் சேர்மன் சுரேஷ்குமார் மற்றும் ஊர் மக்கள்,  ராஜகோபாலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து ராஜகோபாலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இரவு நேரமாகி விட்டதால் மீட்புபணி தடைபட்டது. இதையடுத்து  நேற்று 2வது  நாளாக தீயணைப்பு வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்டு ராஜகோபால் உடலை மீட்டனர்.  பின்னர் பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவம் குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: