புதூரில் 1283 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

விளாத்திகுளம், ஜன. 21:புதூர் காவல் நிலைய உதவி  ஆய்வாளர்  விநாயகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது புதூர் வஉசி தெருவில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அந்த  கடையில் சோதனை நடத்தி விற்பனைக்கு வைத்திருந்த 1,283 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கடை  உரிமையாளர்  னிவாசன் (53) என்பவரை கைது செய்தனர். மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்

மகன் கண்முன்னே

Related Stories: