×

கலெக்டர் தகவல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

விராலிமலை, ஜன.21: விராலிமலை தாலுகா நம்பம்பட்டி கிராமம் புரசம்பட்டியைச் சேர்ந்தவர் போதும்பொண்ணு. இவரது மகள் லலிதா(22). இவர் மணப்பாறை அருகே உள்ள தனியார் பஞ்சுமில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த லலிதா வீட்டு வேலை செய்யாமல் இருந்ததால் தாய் போதும்பொண்ணு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லலிதா நேற்று முன்தினம் இரவு ஆஸ்பெட்டாஸ் வீட்டில் உள்ள குறுக்கு கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விராலிமலை போலீசார் லலிதாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது