×

தமிழ்ப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜன.20: விருதுநகரில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வீரளுர் பொதுப்பாதையில் பிரேதங்களை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து அருந்ததியர்களின் வீடுகள், சொத்துக்களை சூறையாடியதை கண்டித்தும், கொலை வெறித்தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பாக தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முருகன், வீரப்பெருமாள், தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Tigers ,
× RELATED சிறுவலூர் வன்கொடுமை சம்பவத்தில் 20 பேரை கைது செய்ய வேண்டும்