எட்டயபுரத்தில் ரூ.1.94 கோடியில் அறிவுசார் மைய கட்டிட பணிகள் மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

எட்டயபுரம், ஜன. 20: எட்டயபுரத்தில் ரூ.1.94 கோடியில் அறிவுசார் மைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் எட்டயபுரத்தில் அறிவுசார் மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழாவிற்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், பாரதிமில் சேர்மன் ஆழ்வார்உதயகுமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சவுந்தரராஜன், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், நகர செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் முனியசாமி, மாரிமுத்துப்பாண்டியன், பாலமுருகன், வார்டு செயலாளர்கள் கதிர்வேல் பிச்சை, ராமச்சந்திரன், ராமர், மகளிரணி ரத்தினம், முருகலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: