குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் மனு

கோவில்பட்டி, ஜன. 20:  தமிழக  அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர்  அருமைராஜ் மற்றும் விவசாயிகள், கோவில்பட்டி ஆர்டிஓ (பொறுப்பு)  சதீஷ்குமாரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி  வட்டம், கழுகுமலை குறுவட்டம் ஊத்துப்பட்டியில் மானாவாரி விவசாய நிலத்தில்  குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது. விவசாய நிலத்தின் அருகே குவாரி  அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். கால்நடைகள் பாதிக்கப்படும். எனவே  விதிகளை மீறி விவசாய நிலங்களில் குவாரி அமைத்தால் விவசாய சங்கங்கள்  அனைத்தும் சேர்ந்து மக்கள் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: