தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி, ஜன. 20: தூத்துக்குடியில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி  எட்டயபுரம் ரோட்டில் உள்ள நகர துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம்  வழங்க பெறும் வாட்டர் ஒர்க்ஸ் உயரழுத்த மின்தொடரில் மேம்பாட்டு பணி  இன்று (20ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டூவிபுரம் 1, 2, 3, 4, 5வது தெரு, ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜவகர் முத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: