தூத்துக்குடி, ஜன. 20: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 148 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 85 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 38 பேர் மீதும், வைகுண்டம் உட்கோட்டத்தில் 50 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 60 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 76 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 50 பேர் மீதும் என மொத்தம் 514 பேர் மீது பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக மொத்தம் ரூ.1,00,800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.