×

காரிமங்கலம் சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்

காரிமங்கலம், ஜன.19: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 300க்கும் குறைவான மாடுகள் 400க்கும் மேற்பட்ட ஆடுகள் நாட்டுக் கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ₹20லட்சத்திற்கு மாடுகளும், ₹18லட்சத்திற்கு ஆடுகளும், ₹1.50 லட்சத்திற்கு நாட்டு கோழிகளும் விற்பனையானது. கால்நடை வரத்து குறைந்து காணப்பட்டது. இதில் மொத்தம் ₹40 லட்சத்திற்கு  கால்நடை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Karimangalam ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்