ஆண்டிபட்டியில் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா அனைத்துக் கட்சியினர் மரியாதை

தேனி, ஜன. 19: மன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டியில் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தகம் மற்றும் சமுதாய சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திமுக சார்பில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் ஏராளமான கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் மற்றும் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வரதராஜன் ஆகியோர் நிர்வாகிகள் உடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஒன்றியச் செயலாளர் தவச்செல்வம் மற்றும் அய்யணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.செல்வம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் முன்னிலையில் நிர்வாகிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் வி.எஸ்கே ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. உடன் நிர்வாகி ரத்தினவேல் உட்பட பலர் உடனிருந்தனர். ஆண்டிபட்டி வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் பாண்டியராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆண்டிபட்டி மாலை கோவில் வளாகத்தில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் நிர்வாகிகள் பலர் வந்திருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: