5 பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சிவகங்கை, ஜன.19:சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு அரசாணை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்து தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மானாமதுரை நகராட்சி தலைவர் பதவி ஆதி திராவிடர்(பொது) பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவிகள் பொது பிரிவிற்கானவையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 11 பேரூராட்சிகளில் நாட்டரசன்கோட்டை, திருப்பத்தூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், கண்டனூர் ஆகிய ஐந்து பேரூராட்சி தலைவர் பதவிகள் பெண்களுக்கு(பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிங்கம்புணரி, நெற்குப்பை, திருப்புவனம், இளையான்குடி, கோட்டையூர், புதுவயல் பேரூராட்சி தலைவர் பதவிகள் பொது பிரிவிற்கானவையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: