கால்வாயில் பாய்ந்த கார்

திருப்புவனம், ஜன.19:  ராமநாதபுரம் புதுமடத்திலிருந்து மதுரைக்கு வகில் முகமது(55) என்பவர் தனது குடும்பத்தினர் நான்கு பேருடன் காரில் சென்றார். காரை அவரது டிரைவர் கண்ணன் ஓட்டினார். நேற்று மாலை நான்கு வழிசாலையில் மணலூரில் உள்ள மதுரைக்கு குடி நீரேற்றும் நிலையம் எதிரே கார் சென்ற போது, திடீரென்று நிலை தடுமாறி சென்டர் மீடியனை தாண்டி சாலையின் அடுத்த பகுதியில் விழுந்து கால்வாயில் பாய்ந்தது. இதில் வகில் முகமது, அவரது உறவினர்கள் 2 பெண்கள் உடபட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. மானாமதுரை ரோந்து போலீசார், காயமடைந்தவர்களை 108 வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

Related Stories: