தடையை மீறிய 13 பேர் கைது

சிங்கம்புணரி, ஜன.19: சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சியிலுள்ள பாலமுருகனுக்கு பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக முப்பாட்டனுக்கு பொங்கல் வைக்கும் விழா நடத்தப்படுவதாக போஸ்டர் ஒட்டப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு தை பூசத்தை முன்னிட்டு பரம்பு மலை பாதுகாப்பு இயக்கத்தினர் கர்ணன் தலைமையில் பிரான்மலை உச்சிக்கு சென்றனர். பொங்கல் முதல் தைப்பூசம் வரை வழிபாடு தலங்கள் திறக்கக் கூடாது என தடை உள்ளதால் அவர்களுக்கு போலீசார் தடை விதித்தனர். மதியம் 12 மணிக்கு மேல் தடையை மீறி செல்ல முயன்றவர்களை பொதுமக்கள் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கர்ணன் தலைமையில் 13 பேரை எஸ்.வி.மங்கலம் போலீசார், கைது செய்து ஒடுவன்பட்டி சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர்.

Related Stories: