வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு

சின்னாளபட்டி, ஜன.19: சின்னாளபட்டியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத்தன்று பூட்டப்பட்டதால் கோவில் நுழைவுவாயிலில் சூடம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக கோவில்கள் பூட்டப்பட்டுள்ளன. நேற்று தைப்பூசத்தன்று சின்னாளபட்டியில் உள்ள அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டிருந்தன.  பழம்பெருமைவாய்ந்த சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பூட்டப்பட்டதால் தைப்பூசத்திற்காக முருகப்பெருமானை வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் நுழைவுவாயிலில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஒரு சிலர் தாங்கள் கொண்டு வந்த மாலை மற்றும் பழங்களை நுழைவு வாயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.

Related Stories: