புதுச்சேரி, ஜன. 19: புதுச்சேரி கருவடிக்குப்பம் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலர் (42). இவரது மகன் எல்லாடை அருண் (20). காணும் பொங்கலன்று இவர், அதே பகுதியில் வசிக்கும் சூர்யா என்ற கேப் சூர்யா (22) என்பவரின் வீட்டிற்கு சென்று முன்விரோதம் காரணமாக அவரை திட்டிவிட்டு வீடு திரும்பியதாக தெரிகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த சூர்யா, தனது கூட்டாளிகளான ஐஸ் புஷ்பராஜ், பூரி, ரைஸ் அகி, பிச்சை கில்லி பிரதாப், லட்டு, நாகராஜ் உள்ளிட்ட சிலருடன் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பலாக மலர் வீட்டுக்கு வந்தனர்.அங்கு எல்லாடை அருண் இல்லாத நிலையில் ஆத்திரமடைந்த கும்பல் அங்கிருந்தவர்களை ஆபாசமாக திட்டி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டது. வெளியே சென்று வீடு திரும்பிய எல்லாடை அருண், மேற்கண்ட சம்பவத்தை கேள்விப்படவே கோபமடைந்தார்.