திருப்பூர், ஜன.19: கிராப்ட் பேப்பர் விலை உயர்ந்துள்ளதால் அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் ஆடை தயாரிப்பு பிறகு ஏற்றுமதி செய்ய அட்டை பெட்டிகளில் வைத்து பார்சல் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் அட்டை பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான கிராப்ட் பேப்பரின் விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.