தொண்டாமுத்தூர், ஜன.19: கோவை அருகே தொம்புலி பாளையம் தொட்டராயர் சுவாமி கோயிலில் மாட்டுப்பொங்கலன்று சலங்கை எருதுகள் வரவழைக்கப்பட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து எருதுகளுக்கு மாலை, பட்டு, வஸ்திரங்கள், தவிடு, பருத்தி கொட்டை புண்ணாக்கு, கரும்பு பயிர்கள் போன்றவற்றை வழங்கி பாதபூஜை செய்தனர். தொடர்ந்து நாதஸ்வரம் தாரை தப்பட்டை முழங்க சலங்கை எழுதுகள் ஒவ்வொரு கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது. அங்கு பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாதே கவுண்டன் புதூர், கள்ளிப்பாளையம், ஆலாந்துறை புதூர், ஹை ஸ்கூல் புதூர், ஜாகீர் நாயக்கன் பாளையம், சப்பானி மடை ஆகிய பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கப்பட்டது.