கோவை, ஜன.19: கோவைக்கு வரும் வெளிநாட்டினரை வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிப்பதில் சுகாதாரத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. கோவையிலும் ஒமிக்ரான் தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டுள்ளார். ஒமிக்ரான் பரவலை தடுக்க பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என ரிசல்ட் வந்தாலும் கூட 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். பின்னர், 8-வது நாள் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.