கல்லூரி மாணவர் உள்பட இருவர் மீது தாக்குதல்

ஸ்பிக்நகர், ஜன. 19:   தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு முத்தையாபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமணியின் மகன் பெனில் சரவணன்(20). தூத்துக்குடியில் செயல்படும் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பொன்முருகனின் மகனான பாலமணிகண்டன் (24) என்பவரும் முள்ளக்காடு காந்திநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த வினித், சக்திவேல், திருமணி, சாய்சந்திரன், போஜன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கட்டை மற்றும் கல்லால் சரவணனையும், பாலமணிகண்டனையும் சரமாரியாகத் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் வழக்குப் பதிந்த முத்தையாபுரம் எஸ்ஐ முத்துமாலை, தாக்குதல் நடத்திய 6 பேரையும் தேடி வருகிறார்.

Related Stories: