கழுகுமலை, ஜன.19: தமிழகத்தின் தென் பழநி என பக்தர்களால் போற்றப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்களின்றி நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன் கோ ரதத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் பிற கால பூஜைகள் நடந்தன. மேலும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.பொதுவாக திருவிழாவின் போது இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா வரும் நிலையில் இந்தாண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் கோயில் வளாகத்திலேயே எழுந்தருளல் மட்டும் நடைபெற்றது.
தமிழகத்தின் தென்பழநி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பக்தர்களின்றி தைப்பூசத் திருவிழா கோ ரதத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா
- சுவாமி
- அம்பல் வீடி உலா
- தைப்பூச திருவிழா கோ ரதம்
- தென் பழனி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்