கடையம், ஜன.19: தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடந்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டி ஆனை வடிவ மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோயிலில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வாழ்ந்து மூலிகை ஆராய்ச்சி செய்த சிறந்த தலமாகும். உலகத்திலேயே முதல் கபால அறுவை சிகிச்சை நடைபெற்ற இடமாக இந்த தலம் விளங்குகிறது. தைப்பூசத்தையொட்டி நேற்று காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடந்து கோயில் மலைமேல் உள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து, முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.