பக்தர்களின்றி நடந்தது குத்தாலத்தில் பேரூர் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

குத்தாலம், ஜன.19: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் பேரூர் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.பேரூர் திமுக செயலாளர் சம்சுதீன் தலைமை வகித்தார். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை. சங்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் எம்எல்ஏவும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதாமுருகன் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு பேரூர் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது மாவட்ட பொருளாளர் ரவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் சேயோன், மாதிரிமங்கலம் ஊராட்சி செயலாளர் சாமிசெல்வம், துணைச் செயலாளர்கள் சட்ட செந்தில், ஐயப்பன் சுந்தர்ராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், வக்கீல் தணிகை பழனி, இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: