ஆண்டிமடம் அருகே விவசாயி சடலம் மீட்பு

ஆண்டிமடம்,ஜன.19: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (41) இவருக்கு செந்தமிழ்ச்செல்வி (40) என்ற மனைவியும் சந்துரு என்ற மகனும், ஷர்மிளா என்ற மகளும் உள்ளனர்.இருவரும் திருமணம் ஆகாதவர்கள். இந்நிலையில் கருணாகரன் தனது வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி உள்ள முந்திரி தோப்பில் மா மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். ஆடு,மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து கருணாகரன் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த உறவினர்கள் சென்று கருணாகரனின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் எப்படி இறந்தார். கொலையா? தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: