புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை, ஜன. 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 79 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்றிய வாரியாக தடுப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தினசரி கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். மேலும் வெளியில் முக்கவசம் அணிய வேண்டும் என்று வருகின்றனர். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். கை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று 79 பேருக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: