விராலிமலை, ஜன.19: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் கோயிலின் அடிவாரத்தில் வெளியே நின்று வழிபாடு நடத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால் நேற்று இக்கோயில் சாத்தப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் வழக்கம்போல் நான்கு கால பூஜை மட்டும் தடையில்லாமல் நடந்தது. மலைமேல் செல்லும் யானைப்பாதை, வாகனங்கள் செல்லும் தார் சாலை பாதை மற்றும் 207 படிகள் கொண்ட பாதைகள் என அனைத்து பாதைகளும் தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டு மலைமீது ஏறி செல்ல முயலும் பக்தர்களை தடுத்து நிறுத்தி வழிபாட்டை கீழே நடத்தி கொள்ளுமாறு அறிவுறித்தினர்.