தஞ்சையில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

தஞ்சை, ஜன.19: தஞ்சையில் வீட்டு கதவு பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் என ரூ.1.20 லட்சம் மதிப்பு பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை டிபிஎஸ் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி ராதாகவுரி (21). இவர் தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 29.11.2021ம் தேதியன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ராஜகவுரியை தொடர்பு கொண்டு வீட்டின் இரும்பு கேட் சேதமாகி உள்ளதாக தெரிவித்தனர்.

இதனால் ராதாகவுரி வெளியூரிலிருந்து பதறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் காணவில்லை.வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து ராதாகவுரி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Related Stories: