திருவாரூர், ஜன. 19: கர்நாடக மாநிலம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் நீரினை தடுக்கும் வகையில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வரும் அம்மாநில அரசு மற்றும் துணைபோகும் ஒன்றிய அரசை கண்டித்தும், அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 9ம்தேதி முதல் அஙகு யாத்திரை நடத்தி வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும் மேகதாது பகுதியில் இன்று (19ம்தேதி) முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பி.ஆர் பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.