திருவாரூர் ஜன 19: தைப்பூச விழாவினையொட்டி திருவாரூர் பகுதி முருகன் கோயில்கள் வாசலில் பக்தர்கள் வழிப்பட்டனர்.தமிழகத்தில் தைப்பூச நாளில் வடலூர் ராமலிங்கம் சுவாமி அருட்பெருஞ் ஜோதி தரிசனம் மட்டுமின்றி திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து வரும் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த பூஜைகளில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நிலையில் நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.