தைப்பூசவிழா; திருவாரூர் பகுதி முருகன் கோயில்கள் வாசலில் பக்தர்கள் வழிபாடு

திருவாரூர் ஜன 19: தைப்பூச விழாவினையொட்டி திருவாரூர் பகுதி முருகன் கோயில்கள் வாசலில் பக்தர்கள் வழிப்பட்டனர்.தமிழகத்தில் தைப்பூச நாளில் வடலூர் ராமலிங்கம் சுவாமி அருட்பெருஞ் ஜோதி தரிசனம் மட்டுமின்றி திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து வரும் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த பூஜைகளில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நிலையில் நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் கீழ வீதியில் இருந்து வரும் பழனி ஆண்டவர் கோயில், வடக்கு வீதியில் இருந்து வரும் பழனி ஆண்டவர் கோயில், கோயில் கந்தன்குடி சுப்பிரமணியசுவாமி கோயில், எண்கண் சுப்ரமணியசுவாமி கோயில் உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் இந்த கோயில்களுக்கு வெளியே நின்றவாறு முருக பெருமானை வழிப்பட்டனர்.

Related Stories: