தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் மன்மதன்(60). காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பாடி ரிக்ஷா ஓட்டி வருகிறார். நேற்று திருவொற்றியூர் ஒண்டிகுப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் வழிமறித்து அவரிடம் திடீரென சண்டைபோட்டு உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினான்.