சேலம்: சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரைமூக்கன் (எ)செல்வகுமார்(51). இவர் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் உள்ள ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதனிடையே செல்வகுமார் திடீரென வீட்டை காலி செய்து தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது.இந்நிலையில் நேற்று விலை உயர்ந்த சொகுசு காரில் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் செல்வகுமார் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே சைக்கிளில் வந்த ஒருவரை இடித்து தள்ளியுள்ளார்.