பள்ளத்தில் கவிழ்ந்த பஞ்சு லோடு லாரி

சூளகிரி: சூளகிரி அருகே பஞ்சு லோடு ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பெங்களூரில் இருந்து பஞ்சு பேரல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு சேலத்திற்கு சென்று கொண்டிருந்தது. தொப்பூரை சேர்ந்த டிரைவர் சந்திரசேகரன் ஓட்டிக்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் கன்னியாகுமரி தேசிய சாலையில் வந்து போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தில் மோதி அருகில் உள்ள 10 அடி கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்த தகவலின் பேரில், சூளகிரி போலீசார் விரைந்து வந்து பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: