திருப்பூர்: தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள சுப மஹால் அருகில் வெள்ளகோவில் நகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார். 11 மணிக்கு காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமண நிதி உதவி வழங்குதல் நிகழ்ச்சியிலும், மாலை 4 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.