காங்கயம் அருகே பைக்-லாரி மோதி வாலிபர் பலி

திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ளது காரியக்காட்டுவலசு. இந்த பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் தமிழ்செல்வன் (32). இவர் நேற்று பைக்கில் காங்கயம்-நத்தக்காடையூர் ரோட்டில் சென்றார்.  அப்போது அங்குள்ள வே பிரிட்ஜில் இருந்து லாரி  வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும், பைக்கும் மோதிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சின்னச்சாமி அளித்த அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: