சூதாடிய 5 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர்,  ஊத்துக்குளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்   சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, செங்கப்பள்ளி  சந்தை கடை அருகில் சிலர் கூடி நின்றுள்ளனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த  மெளனீஷ் (22), பாண்டி (27), வெங்கடேஷ் (42), தனசேகர் (27), ராஜேந்திரன்  (52) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு  வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீசார்  5 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த ரூ.  12 ஆயிரத்து 100 ஐ பறிமுதல் செய்தனர். வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது  முத்தூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த  சரவணன் (51) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2  லாட்டரி சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஈரோடு  ரோட்டில் குப்புசாமி (50) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக  வைத்திருந்த 3 லாட்டரி சீட்டு, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: