கபீர் புரஸ்கார் விருது

கடலூர், ஜன. 11: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார்“ விருது 2022 ஆம் ஆண்டில் குடியரசுதின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படைவீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில்), இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.

இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிறசாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவதற்கு தகுதியுடைவர்கள் கருத்துருக்களை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம் செம்மண்டலம் ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் 20.01.2022க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: