மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம் புக்கத்துறை ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா அப்பகுதியில் உள்ள இ - சேவை மைய கட்டிடத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சொரூபராணி எழிலரசு தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சித்ரா வெங்கடேசன் முன்னிலை வகித்தார், ஊராட்சி செயலர் சுந்தர் வரவேற்றார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி கலந்துகொண்டு, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, வளாகத்தில் மரக்கன்று நட்டார்.