மக்காச்சோளப் பயிரில் பண்ணை பள்ளி வகுப்பு

சேந்தமங்கலம், ஜன. 9: சேந்தமங்கலம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், அக்கியம்பட்டி கிராமத்தில் நில வள மேம்பாடு திட்டத்தின் கீழ் மக்காச்சோள பயிரில் பண்ணை பள்ளி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார உதவி இயக்குனர் இந்திராணி தலைமை தாங்கி வகுப்பை தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் பச்சையப்பன் கலந்துகொண்டு மக்காச்சோள பயிருக்கு விதை நேர்த்தி செய்வது, நீர், களை, உரம் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் வேளாண் அலுவலர் சந்திரசேகர், அட்மா தொழில்நுட்ப மேலாளர் ராசாத்தி மற்றும் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: