தைப்பொங்கல் திருநாளையொட்டி மண் பானை தயாரிப்பு பணி மும்முரம்

அரூர்,ஜன.9: பொங்கல் திருநாளையொட்டி, அரூரில் மண்பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வருகிற 14ம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. இதையொட்டி அரூர் பகுதியில் பானை தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரூர் அடுத்துள்ள கொங்கவேம்பு பகுதியில் பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் இரவு பகலாக பானை செய்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் கொங்கவேம்புவை சேர்ந்த ராமராஜ் கூறுகையில், பல வருடங்களாக இந்த தொழில் செய்து வந்தாலும் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பானை விலை மிகவும் உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களான மணல், விறகு, வைக்கோல், கரும்பு சோகை, செம்மண், களிமண் இவைகளின் விலை உயர்ந்துள்ளதால் பானையின் விலையும் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு அளவை பொருத்து ₹250 முதல் ₹275க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு ₹300 முதல் ₹350 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதமாக பெய்த மழையால், ஏரியில் களிமண் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால், மழையால் வேலை செய்யமுடியவில்லை. மேலும் மூலப்பொருட்களின் விலை 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதால் பானையின் விலையும் உயர்ந்துள்ளது. பானை தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்களை சலுகை விலையில் கிடைக்க செய்தால் தொழில் செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மண்பானை தொழிலாளர்கள் கூறுகையில், தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மழைப்பொழிவு நின்றவுடன், மண் பானை தயாரிப்பு பணியில் ஈடுபட்டாலும், மண் மற்றும் இதர ெபாருட்களின் விலை உயர்ந்தாலும், எங்களுக்கு மண் பானைக்கு விலை குறைவாக தான் கேட்கிறார்கள். எனவே, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு சலுகைகளை அரசு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: