மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜன.9:  குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் மற்றும் அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக தமிழக அரசால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் மற்றும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உட்பட அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் தமிழக அரசின் மறு உத்தரவு வரும்வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: