×

கொரோனா, ஒமைக்ரான் பரவல் எதிரொலி குறைதீர் கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து கலெக்டர் தகவல்

விருதுநகர், ஜன. 9: கொரோனா, ஒமைக்ரான் பரவல் எதிரொலி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவரது தகவல்: தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்பட அனைத்து குறைதீர் கூட்டங்களும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Omegron ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...