திண்டுக்கல், ஜன. 9: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட குடை பாறைப்பட்டி அருகே உள்ள அந்தோணியார் கோயில் முதல் தெரு பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாறுகால் வசதியை மேம்படுத்த கோரி பொதுமக்கள் நேற்று திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னரும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், திண்டுக்கல்-வத்தலகுண்டு ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.