கல்விக்கான உதவி தொகைக்கு காலநீட்டிப்பு

திண்டுக்கல், ஜன. 9: திண்டுக்கல் மாவட்டம் சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒன்றிய அரசின் இந்த உதவி திட்டத்திற்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் 15.01.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: