மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

திண்டுக்கல், ஜன. 9: தமிழகத்தின் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவி வருவதனை கருத்தில் கொண்டு அரசு அறிவுரைகளின்படி, பொதுமக்களின் நலன் கருதி கோவிட் பாதுகாப்பு நடவடிக்கையாக, வாரந்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 10.01.2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தம் செய்யப்படுகிறது என  தெரிவித்துள்ளார்.

Related Stories: