அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாள் விழா ெகாண்டாட்டம் அன்னதானம் வழங்கிய கட்சியினருக்கு மக்கள் பாராட்டு

சின்னாளபட்டி, ஜன. 9: ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் பிறந்தநாள் விழாவையொட்டி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.

திமுக மாநில துணை பொதுச் செயலாருளம், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டத்தில்  திமுகவினரால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அன்னதானம் மற்றும் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி வசிக்கும் 7வது வார்டு துரைராஜ் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சமயபுரம் சக்திமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொழிலதிபரும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகளுமான இந்திரா துவாரகநாதன் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கினார். அப்பகுதியில் திமுக இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கினார்கள். ஏற்பாடுகளை 7வது வார்டு செயற்குழு உறுப்பினர் நெல்லை சுபாஷ் செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் வர்த்தகர் அணியை சேர்ந்த பொன்முருகன், சமையல் சக்கரவர்த்தி வேல்முருகன், குட்டத்துப்பட்டி டென்னிஸ், கிறிஸ்துராஜா, 7வது வட்ட செயலாளர் செந்தில்குமார் நகர தொண்டரணி அமைப்பாளர் கார்த்திக்கு, நகர விவசாய அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார், கருப்பையா, ராஜலிங்க மூர்த்தி, அபுதாகீர், அண்ணா நினைவு ஆட்டோ நிலைய தலைவர் ரபீக், செயலாளர் திருப்பதி, பொருளாளர் மணிமாறன், முத்தனம்பட்டி ராஜ்குமார் சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். * அம்பாத்துரை ஆஞ்சநேயர் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. தொழிலதிபரும், ஐ.பெரியசாமியின் மகளுமான இந்திரா துவாரகநாதன் அன்னதானத்தை துவக்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதுபோல, திண்டுக்கல்லில் அன்பகம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற இந்திரா துவாரகநாதன் அங்குள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆதி, விஷால், செயற்குழு உறுப்பினர்கள் நெல்லை சுபாஷ், வீரபாண்டி, விவசாய அணியை சேர்ந்த பிரேம்குமார், வர்த்தகர் அணியை சேர்ந்த பொன்முருகன், நகர தொண்டரணி கழனி கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

*குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியராஜக்காப்பட்டியில் அன்னதானம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் வேல்கனி ஹரிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சக்கரைப்பொங்கல், வெஜ் பிரியாணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி இங்கோ பிரிட்டோ, ஒன்றியகுழு உறுப்பினர் திருப்பதி, குஞ்சனம்பட்டி கிளைக் கழகம், புளியராஜக்காப்பட்டி கிளைக்கழகம், மற்றும் பெரியார் நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: