பல்லாவரம்: அனகாபுத்தூரில் த 2 நாட்களுக்கு முன் பிளஸ் 1 மாணவிகள் 2 பேர் மாயமானார்கள். சங்கர் நகர் போலீசார் செல்போன் சிக்னல்கள் உதவியுடன் மாணவிகள் பற்றி விசாரித்தனர். இதில் மாணவிகள் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விடுதியில் இருந்த 2 மாணவிகள் மற்றும் அவர்களுடன் இருந்த 5 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில், பள்ளி மாணவிகளிடம் முகநூல் மூலம் 5 பேரும் நட்பை ஏற்படுத்தி பழகியுள்ளனர். அந்த மாணவிகளை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி 5 பேரும் வெளிமாநிலத்துக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூரை சேர்ந்த சுரேன் (எ) அப்பு (22), பட்டாபிராம் சஞ்சய் (19), திருப்பத்தூரை சேர்ந்த தொல்காப்பியன் (19), விருத்தாசலத்தை சேர்ந்த வினீத் (20) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.