காசநோய் மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கொரோனா வார்டு

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவமனைகளில் கொரோனா  சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரம் சானடோரியம், காசநோய் மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரணிதரன், காசநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபோல, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கைகள், சேலையூர் பாரத் கல்லூரியில் 250 படுக்கைகள், தையூர் அரசு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கைகள், எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் 600 படுக்கைகள் தயாராக உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: